பெரியார் நகரில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது

பெரியார் நகரில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-02-18 15:45 GMT

காவல் நிலையம்

 கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் காவல் எல்லைக்குட்பட்ட, பெரியார் நகர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பிப்ரவரி 17ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில், பெரியார் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது வீட்டில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கொல்லிமலை, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மோங்க நல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி ஆகிய மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர்,

அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 250தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலைய பினையில் விடிவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் சின்னதாராபுரம் காவல் துறையினர்.

Tags:    

Similar News