த்ரோபால்: வெற்றி தமிழக அணிக்கு உற்சாக வரவேற்பு

ஜார்கண்டில் நடந்த நடைபெற்ற தேசிய அளவிலான த்ரோபால் போட்டியில், வெற்றி பெற்ற தமிழக அணி வீரர்களுக்கு திருப்பூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2024-01-01 11:53 GMT
 திருப்பூர் ஜார்கண்ட் மாநிலத்தில் சீனியர் தேசிய அளவிலான த்ரோபால் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்று தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்த போட்டியில் தமிழக அணி சார்பில் வைஷ்ணவி, ஷிவானி, நீலு, பென்னரசி, அமிர்தா, அக்ஷயா, பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் வைஷ்ணவி, ஷிவானி, நீலு ஆகிய 3 பேரும் தெக்கலூரை சேர்ந்த கே.பி.ஆர். மில் நிறுவனத்தை சேர்ந்தவர் ஆவர்கள். இந்நிலையில் வெற்றி பெற்று நேற்று ஜார்க்கண்டில் இருந்து திருப்பூருக்கு வந்த தமிழக அணிக்கு மில் சார்பில் மேள, தாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பனியன் நிறுவன தொழிலாளர்களும் நடனமாடியும், கோஷம் எழுப்பியும் வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் நிறுவன துணைத்தலைவர் சோம சுந்தரம், மனிதவள மேம்பாட்டு தலைமை அதிகாரி வீரகுமார், மனித வள மேம்பாட்டு அதிகாரி தங்கவேல் மற்றும் பயிற்சியாளர் கார்த்திக் ஆகியோர் பாராட்டினர்.
Tags:    

Similar News