வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலி கவலைக்கிடம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சரிவர உணவு உண்ணாமல் மிகவும் சோர்வடைந்து நிலையில் காணப்படும் புலி

Update: 2024-02-17 09:34 GMT
புலி கவலைக்கிடம்
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே அமைந்துள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் வயது முதிர்வு அடைந்த விஜய் என்ற ஆண் வங்கப் புலிக்கு கடந்த ஒரு வார காலமாக உடல் நலம் குறைவு ஏற்பட்டு சரிவர உணவு உண்ணாமல் மிகவும் சோர்வடைந்து நிலையில் காணப்பட்டது. இது குறித்து புலியை பராமரிக்கும் ஊழியர் பூங்கா கால்நடை டாக்டரிடம் தகவல் தெரிவித்துள்ளார் இதைத்தொடர்ந்து உயிரியல் பூங்கா டாக்டர்கள் வங்கப் புலிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருந்த போதிலும் வங்கப்புலி மிகவும் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News