திருத்தணி முருகன் கோயிலில் கல்யாண உற்சவருக்கு திருக்கல்யாணம்.

Update: 2023-11-20 08:16 GMT

திருக்கல்யாணம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
முருகனின் ஐந்தாம் படை வீடாக சிறப்பு பெற்ற திருவள்ளூர் மாவட்டம், முருகன் கோயில் கடந்த 14ஆம் தேதி முதல் ஒரு வாரமாக கந்தசஷ்டி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. விழா முன்னிட்டு தினமும் மூலவகடவுளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டும், உற்சவர் சண்முகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று மாலை 5 டன் வண்ண மலர்கள் கொண்டு  புஷ்பாஞ்சலி நடைபெற்றது. விழாவில் இறுதி நாளான இன்று காலை வள்ளி, தெய்வானை சமேத கல்யாண உற்சவருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை  முன்னிட்டு பக்தர்கள் மேள தாளங்கள் முழங்க சீர்வரிசை கொண்டு வந்து வழங்கினர். கோயில் அர்ச்சகர்கள் சிறப்பு மந்திரங்கள் ஒதப்பட்டு வள்ளி தெய்வானை கழுத்தில் முருக பெருமான் தாலி கட்டினார். அப்போது திரளாக கூடியிருந்த பக்தர்கள் அரோகர முழக்கத்துடன் சுவாமி திரிசனம் செய்து வழிபட்டனர். திருக்கல்யாணத்தை  தொடர்ந்து பெண்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மஞ்சள் ,குங்குமம், தாலி வழங்கப்பட்டது. கந்தசஷ்டி விழாவில் இறுதி நாளன இன்று  முருகப்பெருமானை தரிசிக்க அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால் மலைக் கோயிலில்  நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர்.
Tags:    

Similar News