திருப்பத்தூர் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை

திருப்பத்தூர் கர்ப்பிணி பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2024-02-23 09:36 GMT

கோப்பு படம் 

திருப்பத்துார் மாவட்டம், ஜவ்வாது மலை புதுார் நாடு கிராமத்தை சேர்ந்தவர் செஞ்சீவி குமாரி இவரும், அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரும் ஓராண்டுக்கு முன் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். மேலும் செஞ்சீவி குமாரி 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த செஞ்சீவி குமாரி நேற்று வீட்டில் தனியாக இருந்த போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் சாவுக்கு யார் காரணம் என்பதில், இரு தரப்பு பெற்றோர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

தகவல் அறிந்த திருப்பத்துார் கிராமிய போலீசார் அங்கு சென்று இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர் மேலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அதன்பின் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணிப் பெண்ணை மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி ஓராண்டே ஆவதால், இந்த வழக்கு திருப்பத்துார் சப் கலெக்டருக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையே இச்சம்பவத்தால் புதுார் நாடு கிராமத்தில் பதற்ற நிலை நீடித்ததால்,சஞ்சீவி குமாரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு திருப்பத்துார் தில்லை நகர் சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்ய அவரது பெற்றோர் முடிவு எடுத்தனர். அதன்படி இன்று மாலை 5 மணி அளவில் தில்லை நகர் சுடுகாட்டுக்கு போலீஸ் பாதுகாப்புடன் செஞ்சீவி குமாரியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

அப்போது அங்கு அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்வதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதை தடுக்கச் சென்ற திருப்பத்துார் நகர போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டனை செஞ்சீவி குமாரியின் தாய் மாமாவான காளியப்பன்(38). என்பவர் தாக்கியுள்ளார்.

   இது குறித்து எஸ்ஐ மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்தூர் நகர போலீசார் காளியப்பன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News