கும்பகோணத்தில் பொதுமக்களுக்கு  வினாடி - வினா போட்டிகள் 

கும்பகோணத்தில் 14 ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு  வினாடி - வினா போட்டிகள் நடைபெற்றது.

Update: 2024-01-18 15:17 GMT
ஆட்சியர் தீபக் ஜேக்கப்

இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில், 14 ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு SVEEP திட்டத்தின்படி மாநில அளவிலான பொது மக்களுக்கான வினாடி வினா போட்டி 21.01.2024 (ஞாயிறுக் கிழமை) அன்று காலை 11 மணி முதல் 11.15 மணி வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  இந்தப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள்  “https://www.erolls.tn.gov.in/Quiz2024” என்ற இணையதள முகவரியில் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்யலாம். இப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை மேற்காணும் இணையதளத்தில் 18.01.2024 மற்றும் 19.01.2024 (2 நாட்கள் மட்டும்) ஆகிய நாட்களில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். 

இதில் கலந்து கொள்வதற்கு பங்கேற்பாளரின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியானது கட்டாயமாக உள்ளீடு செய்யப்பட வேண்டும்.  ”இந்தியாவில் தேர்தல்கள்” என்ற தலைப்பின் அடிப்படையில் இந்த போட்டியானது நடைபெறும். மேலும் விவரங்களுக்கு இணையதளம் https://www.erolls.tn.gov.in/Quiz2024 ,  மாநில உதவி மைய எண். 1800-4252-1950, மாவட்ட உதவி மைய எண் 1950 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News