வடசேரியில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

வடசேரி பகுதியில் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-20 06:25 GMT
பைல் படம்
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதை அடுத்து வடசேரி சப் இன்ஸ்பெக்டர் மேரி மெரிபா தலைமையில் அருகு விளை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள செல்வராஜ் (71) என்பவரின் கடையில் சோதனை நடத்திய போது, அங்கு ரகசியமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.   இதை அடுத்து அந்த கடையில் நடத்திய சோதனையில் அங்கிருந்து சுமார் அரை கிலோ புகையிலை பொருள்கள் இருப்பதை கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனர். செல்வராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
Tags:    

Similar News