தம்மம்பட்டியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2024-06-06 15:44 GMT

பறிமுதல் 

தம்மம்பட்டி பேருந்து நிலைய கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய சோதனையில் 60 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டது.தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள கடையில் குட்கா, புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலருக்கு புகார் சென்றதால், கெங்கவல்லி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா தலைமையில் தம்மம்பட்டி பேருந்து நிலைய கடைகளில், சோதனை நடத்தப்பட்டது.

பேரூராட்சியின் 8 ஆவது கவுன்சிலரான சமீனா பேகத்தின் மகன் ஆரிப் (32) என்பவரது கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ குட்கா, 40 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்தக் கடைக்கு 'சீல்' வைத்தனர்.

Tags:    

Similar News