ஆட்சியரகத்தில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

நாளை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

Update: 2024-02-25 15:10 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெறும். அதன்படி பிப்ரவரி 26 ஆம் தேதியான நாளை மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கபட்டுள்ளது.

இதில் முதியோர் உதவி தொகை, பட்டா வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்கி தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அலுவலகம் தரப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.

Tags:    

Similar News