லாபத்தில் உள்ள சுற்றுலாத்துறை- அமைச்சர் ராமசந்திரன்

சுற்றுலாத்துறை லாபத்தில் உள்ள நிலையில், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மேம்பாட்டு பணிகள் நடக்கிறது என அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

Update: 2024-03-02 09:56 GMT

கோவை:ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இயங்கி வரும் வாலங்குளம் படகு இல்லத்தை  சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். படகு இல்லம் வரும் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாத காரணமாக  அவதிப்பட்டு வருகின்றனர்.இதற்கு தீர்வாக வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கான திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இ

து தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் நேரில் வந்து பார்வையிட்டார்.அப்போது அதிகாரிகளிடம் இது குறித்தான திட்ட அறிக்கை தயார் செய்து அளிக்கவும் அதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக செய்து கொடுப்பதாக உத்தரவாதம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் திராவிட மாடல் ஆட்சியில் சுற்றுலாத்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் சுற்றுலாத்துறை இந்தியாவிலேயே உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் முதலிடத்திலும் அயல்நாடு சுற்றுலா பயணிகள் இரண்டாவது இடத்திலும் தமிழ்நாடு உள்ளது என்றவர்.

அதை முதலிடத்தில் கொண்டு வருவதற்கான பணிகளைசெய்து வருவதாக தெரிவித்தார்.உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறை மேம்படுத்தி வருவதாகவும் இதனால் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் தேவையான வசதிகள் செய்து கொடுக்கபட்டு வருகிறது என்றார்.அந்த வகையில் கோவை வாலங்குளத்தில் படகு சவாரி செய்துள்ளதாகவும் ஆனால் வாகனம் நிறுத்துவதற்கு இடம் இல்லாத நிலையில் அதை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய ஆய்வு செய்து வருவதாக கூறியவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் சில பரிந்துரைகளை செய்துள்ளனர் என தெரிவித்தார். சுற்றுல்லாதுறை லாபத்தில் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் அதுவும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் கூடுதலான லாபத்தில் இயங்கி வருகிறது என்றார். 

அதிகமான வருமானம் வந்தால் வருமான வரி செலுத்த வேண்டும் அதற்கு பதிலாக நம் மக்களுக்கு பயன்படுத்தினால், மக்கள் பயன்படுத்துவார்கள் எனவும் தெரிவித்தார்.படகு சவாரி கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு கட்டணம் குறித்து ஆய்வு செய்து குறைப்பதற்கான ஆய்வு செய்வதாகவும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தால் கட்டணம் பெரிதாக தெரியாது என்றவர் குறிச்சி குளத்தில் படகு சவாரி குறித்து ஆய்வு செய்த பிறகு பதில்தெரிவிக்கின்றேன் என்றார். நாடாளுமன்ற மன்ற தேர்தலுக்கு பின் திமுக தமிழ்நாட்டில் இருக்காது என பிரதமர் மோடி பேச்சுக்கு தமிழ்நாட்டில் திமுக இருக்குமா? இல்லையா?? என்பது மக்களுக்கு தெரியும் எனவும் பாஜக இருக்காதா?? திமுக இருக்காதா?? என்பதை பொறுத்து இருந்து பாருங்கள் என்றார்.நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் திமுக நிச்சியமாக வெற்றி அடையும் அதில் எந்த சந்தேகம் வேண்டாம் என்றவர் அதிமுக சவால் விட்டாலும் ஆ ராசாதான் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்றார்.

Tags:    

Similar News