'பாரம்பரிய கலைகளின் விழிப்புணர்வு கிரியேட்டர் விருது'

மண்வாசம் லாவண்யா அவர்களுக்கு 'பாரம்பரிய கலைகளின் விழிப்புணர்வு கிரியேட்டர் விருது' யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக வழங்கப்பட்டது.

Update: 2024-05-06 15:07 GMT

மண்வாசம் லாவண்யா அவர்களுக்கு 'பாரம்பரிய கலைகளின் விழிப்புணர்வு கிரியேட்டர் விருது' யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக வழங்கப்பட்டது.


மரம் நடும் விழா யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 161 ஆவது வார நிகழ்வாக மரம் நடும் விழா ஒத்தக்கடையில் நீலமேக நகர் ரேஷன் கடையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தென்னவன் வரவேற்றார். ஆலோசகர் பிரபு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக யூடியூபர் மண்வாசம் லாவண்யா கலந்து கொண்டு பாரம்பரிய கலைகள் பற்றி பேசினார். யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக மண்வாசம் லாவண்யா அவர்களுக்கு 'பாரம்பரிய கலைகளின் விழிப்புணர்வு கிரியேட்டர் விருது' வழங்கப்பட்டது. ரேசன் கடையில் புங்கை மரம், மயிற்கொன்றை மரம் நடப்பட்டது. குழந்தை வெண்பா மரங்கள் குறித்து கவிதை வாசித்தார். பாரம்பரிய கலைகளான சிலம்பம், வளரி, சுருள் முதலியன நடைபெற்றது. ஆலோசகர் கார்த்திகேயன் தொகுத்து வழங்கினார். விழாவில் ஆலோசகர்கள் சிலம்பம் மாஸ்டர் பாண்டி, ராகேஷ், மாவட்ட கல்வி அலுவலர் பணி நிறைவு செல்வராஜ், சமூக ஆர்வலர்கள் அசோகன், பரமேஸ்வரன், அசோக் குமார், ராமகிருஷ்ணன், நீலமேக நகர் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள், ஆசிரியை அருணாச்சலத்தம்மாள், பாஸ்கரன், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மரங்கள் நட்டனர். உறுப்பினர் தாகா நன்றி கூறினார்.
Tags:    

Similar News