போக்குவரத்து விதி மீறல் : வாகனங்களுக்கு பூட்டு

கும்பகோணத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட கார்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

Update: 2024-05-26 03:34 GMT

கார்களுக்கு பூட்டு 

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் பிரதான இடங்களில் அடிக்கடி வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா். இதுகுறித்து போக்குவரத்து போலீஸாருக்கு புகாா்கள் வந்தது. இந்நிலையில், கும்பகோணம் ஆயிகுளம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டதை அறிந்த அங்கு சென்ற போக்குவரத்து காவல் ஆய்வாளா் விஜய்லூா்து விதிகளை மீறி நிறுத்தி வைக்கப்பட்ட காா்களுக்கு பூட்டு போட்டாா். இதையடுத்து அங்கு வந்த காா் உரிமையாளா்கள தலா ரூ.500 அபராதம் செலுத்திவிட்டு காா்களை விடுவித்தனா்.
Tags:    

Similar News