மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அனைத்து துறை அலுவலர்களுடனான பயிற்சி கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அனைத்து துறை அலுவலர்களுடனான பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-25 11:06 GMT

மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அனைத்து துறை அலுவலர்களுடனான பயிற்சி கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் அனைத்து அரசு கட்டிடங்களையும் எளிதில் அணுகும் வகையில் தடையில்லா சூழ்நிலை ஏற்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அரசுத்துறை அலுவலர்களுக்கு மாற்றுத்திறனாளிகளை எவ்வாறு அனுகுவது என்பது குறித்தும், அவர்களுக்கான கட்டிட வழிமுறைகள் மற்றும் பயன்கள் குறித்தும் கூட்டத்தில் எடுத்துரைத்து, இதற்கான செயல் விளக்க பயிற்சி வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News