உதவி கமிஷனர்கள் இடமாற்றம்

தாம்பரம், மணிமங்கலம், சேலையூர் உதவி கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-01-04 05:59 GMT
காவல் ஆணையர் அலுவலகம் 
மணிமங்கலம் உதவி கமிஷனராக இருந்த ரவி, தாம்பரம் காவல் ஆணையரக நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பதில், கோவை மாவட்ட, பேரூர் டி. எஸ். பி. , யாக இருந்த ராஜபாண்டியன், மணிமங்கலம் உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் உதவி கமிஷனராக இருந்த சீனிவாசன் சைதாப்பேட்டை உதவி கமிஷனராகவும், அடையாறு உதவி கமிஷனராக இருந்த நெல்சன் தாம்பரம் உதவி கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலையூர் உதவி கமிஷனராக இருந்த முருகேசன் அடையாறு உதவி கமிஷனராகவும், சைதாப்பேட்டை உதவி கமிஷனராக இருந்த கிறிஸ்டின் ஜெயசீலி சேலையூர் உதவி கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்களில் அருள் செல்வன், தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி கமிஷனராகவும், செல்வசேகர், தாம்பரம் காவல் ஆணையரக பயிற்சி பிரிவு மைய உதவி கமிஷனராகவும், ஆல்டிரின், தாம்பரம் காவல் ஆணையரக நலப்பிரிவு உதவி கமிஷனராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
Tags:    

Similar News