மின்மாற்றி பழுது - மக்கள் அவதி !

மின்மாற்றிபழுதடைந்ததால் கடந்த ஒரு மாதமாகவே குறைந்த மின் அழுத்தமும், அடிக்கடி மின்த டையும் ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மின் வினியோகம் தடைபட்டதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

Update: 2024-04-18 05:03 GMT

மின்மாற்றி

பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மின்மாற்றிபழுதடைந்ததால் கடந்த ஒரு மாதமாகவே குறைந்த மின் அழுத்தமும், அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மின் வினியோகம் தடைபட்டதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மின்மோட்டாரை இயக்க முடியாததால் தண்ணீர் எடுப்பதற்கு நீண்ட துாரம் நடந்து செல்லும் நிலை உள்ளது.இதனால் அதிருப்தி யடைந்துள்ள மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News