பொள்ளாச்சியில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் போக்குவரத்து கழக நிர்வாகத்தை கண்டித்து போக்குவரத்து துறை தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

Update: 2024-03-17 09:35 GMT

கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

பொள்ளாச்சி போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட இரண்டாவது கிளையில் ஓட்டுநர் நடத்துனர் மற்றும் பணிமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.. இந்நிலையில் அலுவலக மேலாளராக பணிபுரிபவர்கள் ஒரு சில சங்கத்தினருக்கு மட்டும் சாதகமாக செயல்படுவதாக கூறி சி ஐ டி யு தொழிற்சங்கத்தினர் பல்வேறு வகையில் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

ஆனால் அதில் எவ்வித தீர்வும் ஏற்படாததால் நிர்வாகத்தின் அராஜக போக்கை கண்டித்து பொள்ளாச்சி இரண்டாவது கிளை சிஐடியு தொழிற்சங்க செயலாளர் பொன்னுசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் பரமசிவம் துணை செயலாளர் வி கே முருகேசன் மற்றும் மோகன்ராஜ் சுரேஷ் உட்பட திரளான போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது போக்குவரத்து கழக அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது மேலும் இதே நிலை நீடித்தால் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்..

Tags:    

Similar News