போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-09 12:36 GMT

ஆர்ப்பாட்டம் 

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் ,  ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சிஐடியு , ஏஐடியுசி , அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இன்று நடைபெற்ற வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே வேலை நிறுத்த போராட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு , அண்ணா தொழிற்சங்கம் மற்றும் போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் நலச் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வில் உள்ள மற்றும் அனுபவம்  இல்லாத ஓட்டுநர்களை வைத்து தமிழக அரசு பேருந்துகளை இயக்கி வருவதாகவும் இன்று மதியத்திற்கு மேல் வேலை நிறுத்த போராட்டத்தில் உண்மை நிலவரம் தெரியவரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News