போக்குவரத்து ஊழியர் ஸ்டிரைக் : காத்திருக்கும் பயணிகள்

நெல்லையில் 80 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. ஆனால் சேரன்மகாதேவி,கல்லூர் பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.இதனால் பயணிகள் பேருந்து நிலையங்களில் காத்திருக்கின்றனர்.

Update: 2024-01-09 09:16 GMT

பயணிகள் காத்திருப்பு 

போக்குவரத்து தொழிலாளர்கள் அரசிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நள்ளிரவு முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் நெல்லையில் 80 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.ஆனாலும் சேரன்மகாதேவி,கல்லூர் பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.இதனால் பயணிகள் அவதி அடைந்து பேருந்து நிலையத்தில் காத்து கிடக்கின்றனர்.
Tags:    

Similar News