பள்ளியில் மரம் நடும் விழா!

சிறுத்தொண்டநல்லூரில் எஸ்எம்ஏ அரசு மேல்நிலைப் பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது.

Update: 2023-12-07 16:30 GMT

சிறுத்தொண்டநல்லூரில் எஸ்எம்ஏ அரசு மேல்நிலைப் பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடி மாவட்டம், சிறுத்தொண்டநல்லூரில் செயல்படும் எக்கோ கிளப் சார்பாக டிவிஎஸ்எஸ்எஸ்டி மற்றும் மகளிர் சுய உதவி குழு இணைந்து எஸ்எம்ஏ அரசு மேல்நிலைப் பள்ளியில் மரம் நடு விழா தலைமை ஆசிரியர் மேரி தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலன், டிவிஎஸ்எஸ்எஸ்டி விஜயகுமார், எஸ்எம்சி தலைவி பரமேஸ்வரி, பஞ்சாயத்து தலைவி ஜெயந்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

விழாவில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் அனைவரும் இணைந்து காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் 24 மரங்கள் வைத்து அதனை பராமரிக்கும் வகையில் 24 கூண்டுகளும் வைக்கப்பட்டன. இவற்றை பள்ளி எக்கோ கிளப் பொறுப்பு ஆசிரியர் யோ. விஜயா கிளாடிஸ் அவர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.

Tags:    

Similar News