விஜயகாந்துக்கு நினைவஞ்சலி

மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவஞ்சலி நிகழ்ச்சி சேலத்தில் நடந்தது.

Update: 2024-02-05 05:04 GMT

மறைந்த நடிகர் விஜயகாாந்துக்கு சேலத்தில் அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரும் தமிழக முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.

அதனை தொடர்ந்து அவரது உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேமுதிகவினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நினைவேந்தலையொட்டி சேலம் மாநகர் மாவட்ட தே.மு.தி.க சார்பில் செவ்வாய் பேட்டை பகுதி நான்கு ரோடு சத்திரம் அருகில் விஜயகாந்த் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செவ்வாய் பேட்டை பகுதி செயலாளர் தக்காளி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு விஜயகாந்த் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 300க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகர மாவட்ட துணை செயலாளர் சுகுமார் செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் பொதுக்குழு உறுப்பினர் எஸ் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News