விபத்தில் உயரிழந்த பிஎஸ்எப் வீரரின் உடலுக்கு மரியாதை

பெங்களூரில் பணியின் போது விபத்தில் உயிரிழந்த பி.எஸ்.எப் வீரரின் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது .

Update: 2023-10-31 14:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 கர்நாடக மாநிலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த வேலூரைச் சேர்ந்த எல்லை பாதுகாப்புப் படை வீரரின் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்தவர் சுதாகர்(41). இவர் கர்நாடகாவில் உள்ள எஸ்டிசி பட்டாலியனில் எல்லை பாதுகாப்பு படை வீரராக வேலை செய்து வந்தார்.

பெங்களூரில் சாலை விபத்தில் சுதாகர் உயிரிழந்ததை அடுத்து அவரது உடல் வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மயானத்துக்கு கொண்டுவரப்பட்ட சுதாகரின் உடலுக்கு, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி குண்டுகள் முழுங்க இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News