விஜய்காந்த் மறைவுக்கு மெழுகுவர்த்தி வைத்து மொட்டை அடித்து அஞ்சலி.

ராசிபுரத்தில் விஜய்காந்த் மறைவுக்கு மெழுகுவர்த்தி வைத்து மொட்டை அடித்து அஞ்சலி.

Update: 2023-12-30 09:47 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் V.நகர் பகுதியைச் சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி எம்.கார்த்தி கேயன், (36). தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மறைவால் நேற்று முதல் மிகுந்த துக்கத்தில் வீட்டிலேயே இருந்த இவர் மாலை 6 மணிக்கு இவருடைய உடல் புதைக்கப்படுவதை தொலைக்காட்சியில் பார்த்து கதறி அழுது கொண்டே ராசிபுரம் புதிய பஸ் நிலையம் வந்து அஞ்சலி செலுத்த வைத்திருந்த விஜயகாந்த் படத்தின் முன் அமர்ந்து மொட்டை அடித்து தன்னுடைய கண்ணீர் அஞ்சலியை செலுத்தினார். மேலும் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி தான் அவருடைய தீவிர ரசிகன் என்பதை உணர்த்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
Tags:    

Similar News