அரசு கல்லூரியில் முப்பெரும் விழா

திருக்காட்டுப்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த முப்பெரும் விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Update: 2024-03-24 01:17 GMT

பைல் படம் 

 பூதலுாரில் திருக்காட்டுப்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இலக்கிய மன்ற விழா, விளையாட்டு விழா, ஆண்டு விழா என முப்பெரும் விழா முதல்வர் அங்கம்மாள் தலை மையில் நடந்தது. குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் ஜான்பீட்டர் பேசினார், பிரிஸ்ட் நிகர்நிலைப் பல்கலைப் புலத் தலைவர் சின்னப்பா வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த் துறைத் தலைவர் ராஜா வரதராஜா வரவேற்றார். வணிகவியல் துறைத் தலைவர் பாலு நன்றி கூறினார். உடற்கல்வி இயக் குனர் சந்திரசேகரன் கலந்து கொண்டார்.மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சிகளை ஆங்கிலத் துறைத் தலைவர் ஆகாஷ் தொகுத்து வழங்கினார்.
Tags:    

Similar News