செம்பனார்கோவில் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் பலி

செம்பனார்கோவில் அருகே லாரியும் வீட்டு உபயோக பொருட்களை  ஏற்றி சென்ற மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மினி லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.

Update: 2024-06-30 13:56 GMT

விபத்தில் சிக்கியவர்கள்

 மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் காவல் எல்லைக்கு உட்பட்ட கிடாரங்கொண்டான் கிராமம் பூம்புகார் சாலையில் மங்கை நல்லூரில் இருந்து வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சி சென்ற ஈச்சர் லாரி எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் ஈச்சர் லாரி ஓட்டுனர் கடலூர் மாவட்டம் வேப்பத்தூர் கொளவாய் கிராமத்தை சேர்ந்த பாண்டியன், அதில் பயணித்த அதே பகுதியை சேர்ந்த முருகன், வினோத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் ஆபத்தான நிலையில் இருந்த பாண்டியன் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். முருகன், வினோத் ஆகியோர் எலும்பு முறிவு ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக பாண்டி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து செம்பனார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News