கார் விபத்தில் த.வா.க நிர்வாகி உயிரிழப்பு - வேல்முருகன் அஞ்சலி

சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்ற கண்டெய்னர் லாரியில் பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலுக்கு வேல்முருகன் எம்.எல்.ஏ நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2024-02-07 11:27 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த குருபரப்பள்ளி அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் சபரி 40 மற்றும் அவரது கட்சி ஆதரவளர்கள் அசோக் குமார் 27 மற்றும் அசோக்குமார் (33) மூன்று பேரும் சென்னையில் இருந்து ஓசூர் நோக்கி நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர். அப்போது குருபரப்பள்ளி அடுத்த மேலுமலை வனப்பகுதி சென்று கொண்டிருந்தபோது முன்னே சென்று கொண்டிருந்த லாரியின் மீது பின்னே சென்ற கார் பலமாக மோதி விபத்துகுள்ளனாது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் சபரி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த குருபரப்பள்ளி போலீசர் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு போலீசார் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்துள்ளனர். பின்னர் சபரியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் விபத்தில் கிருஷ்ணகிரியின் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் உயிரிழந்த சம்பவம் அறிந்து கட்சி தலைவர் வேல்முருகன் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

Tags:    

Similar News