கார் கண்ணாடி உடைப்பு- இருவர் கைது

உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் டீக்கடையில் தகராறு செய்து கார் கண்ணாடியை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-10 06:55 GMT

கார் கண்ணாடி உடைப்பு 

 உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சியைச் சேர்ந்தவர் சக்திவேல், 55; ஸ்பிளண்டர் பைக்கில் மீன் வியாபாரத்தை முடித்துவிட்டு குடிபோதையில் டோல்கேட் பகுதியில், உள்ள டீக்கடைக்கு வந்தார். அப்போது அவர், போதையில் ஆபாசமாக திட்டி கொண்டு டேபிள் சேர்களை உடைத்து சேதப்படுத்தினார்.

தடுக்க வந்த டீக்கடை ஊழியர்களையும் கற்களை வீசி தாக்கினர். அப்போது அந்த கல் அங்கே நிறுத்தியிருந்த பண்ருட்டியைச் சேர்ந்த ஆஷிக் ரகுமான், 33; என்பவரது கார் கண்ணாடியில் பட்டு உடைந்தது. இதனை தட்டிக்கேட்ட ஆஷிக்ரகுமானை சக்திவேல் மற்றும் அவரது உறவினர்கள் தாக்கினர்.

இதுகுறித்து ஆஷிக்ரகுமான் கொடுத்த புகாரின் சக்திவேல், அவரது தம்பி மகன் ஜெய்பிரகாஷ் மகன் புருஷோத்தமன், 23; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News