தொண்டு காளிபாளையத்தில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது

தொண்டு காளி பாளையத்தில் பணம் வைத்து சூதாடிய இருவரை காவல்துறை கைது செய்தது.

Update: 2024-02-19 11:36 GMT

தொண்டு காளி பாளையத்தில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது. கரூர் மாவட்டம், தென்னிலை காவல் எல்லைக்குட்பட்ட, தொண்டு காளிபாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், பிப்ரவரி 18ஆம் தேதி காலை 9 மணி அளவில்,தொண்டு காளிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு முள்தோட்டத்தில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டுபிடிக்கப்பட்டு, சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த பூபதி மற்றும் குணசேகரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் சூதாட பயன்படுத்திய பணம் மற்றும் சூதாட்ட அட்டைகளை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து,பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தென்னிலை காவல்துறையினர்.

Tags:    

Similar News