குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்றதாக இருவர் கைது

குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்றதாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தலைமறைவானார்.

Update: 2024-06-29 16:50 GMT

கோப்பு படம் 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில், போலீசார் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மீன் கடை ஒன்றில் போலி லாட்டரி விற்பனை நடப்பது தெரிய வந்தது.

நேரில் சென்ற போலீசார், அதே பகுதியை சேர்ந்த சரவணன், 45, ஜெகதீஸ்வரன், 42, ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து வெள்ளை தாளில் நம்பர்கள் எழுதப்பட்ட 10 எண்ணிக்கை சீட்டுக்களை பறிமுதல் செய்தனர். இந்த போலி லாட்டரி விற்பனையில் தொடர்புடைய ரவி, 53, என்பவர் தலைமறைவானார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News