குள்ளஞ்சாவடி: குட்கா விற்ற இருவர் கைது

கடலூர் மாவட்டம் கோரணப்பட்டு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்

Update: 2023-12-28 16:37 GMT

குட்கா விற்பனை செய்தவர் கைது

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி காவல் துறையினர் மதன கோபாலபுரம், கோரணப்பட்டு பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள 2 பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதையடுத்து மதன கோபாலபுரத்தை சேர்ந்த மஞ்சுளா, கோரணப்பட்டு விஜயா என்ற இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Tags:    

Similar News