ஆடுகளை திருடிய இருவர் அதிரடி கைது

திசையன்விளை அருகே ஆடுகளை கொள்ளையடித்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-02-20 06:05 GMT

ஆடுகளை திருடிய இருவர் அதிரடி கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த முபாரக் இம்ரான் தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் இவரின் மூன்று ஆடுகளை காணவில்லை. இதுகுறித்து முபாரக் இம்ரான் அளித்த புகாரின் அடிப்படையில் திசையன்விளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஆறுமுகம்,சுபாஷ் ஆகிய இருவரும் தான் ஆடுகளை திருடியது தெரியவந்தது. இருவரையும் திசையன்விளை போலீசார் இன்று கைது செய்தனர்.
Tags:    

Similar News