பணகுடியில் மக்களை அச்சுறுத்திய இருவர் சிறையில் அடைப்பு

பணகுடியில் மக்களை அச்சுறுத்திய இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2024-03-17 09:08 GMT

பாளையங்கோட்டை சிறை சாலை

நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ், விஜய் ஆகிய இருவரும் கைதாகி ஏற்கனவே சிறையில் உள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் பல்வேறு வழக்குகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையில் ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவில் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News