காட்டுப்பன்றி வேட்டையாடிய இரண்டு பேர் கைது

ஜவ்வாது மலை கம்புகுடி கிராமத்தில் காட்டுப்பன்றி வேட்டையாடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-02 01:43 GMT

ஜவ்வாது மலை கம்புகுடி கிராமத்தில் காட்டுப்பன்றி வேட்டையாடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.


திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை கம்புகுடி கிராமத்தில் காட்டுப்பன்றி வேட்டையாடிய இரண்டு பேர் கைது திருப்பத்தூர் கோட்ட மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் அவர்களுக்கு ஆண்டியப்பனூர் அடுத்த கம்பு குடிப்பகுதியில் கள்ளத் துப்பாக்கியை வைத்து காட்டு பன்றிகள் வேட்டையாடுவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது அவரின் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் வனச்சரகு அலுவலர் சோழராஜன் தலைமையில் வன பணியாளர்கள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆண்டியப்பனூர் அடுத்த கம்புகுடி பகுதியில் இருவர் கள்ள துப்பாக்கியை வைத்து காட்டு பன்றியை வேட்டையாடி சமைத்து கொண்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அவரைப் பிடித்து விசாரிக்கையில் பழைய பாளையம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சின்ன பையன் என்பது தெரியவந்தது. இந்த இரண்டு பேர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News