உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.

Update: 2024-03-09 07:10 GMT

போதை பொருட்கள்

திருவாரூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் உழிக்கும் வகையில் தீவிர வேட்டை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது . திருவாரூர் நகரப் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கிய இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் கையில் இருந்த பையை சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக கடத்தி வந்தது தெரிய வந்தது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த உத்தர பிரதேச மாநிலம் மராலி பண்டா பகுதியைச் சேர்ந்த ராம் கெலவன் என்பவரின் மகன் சோட்டாலால் மற்றும் ஹோரிலால் என்பவரின் மகன் கணேஷ் பிரசாத் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News