கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த இருவரை பிடித்த போலீசார் ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2024-06-08 08:24 GMT

கஞ்சா விற்பனை செய்தவர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் முனீர்பாஷா மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டுப்பாக்கம் ரயில்வே கேட் அருகே சந்தேகிக்கும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் 1½ கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 பேரையும் போலீசார் பாணாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் காட்டுப்பாக்கம் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்த ஜெகதீஷ் (24) மற்றும் கன்னிகாபுரத்தை சேர்ந்த முத்துராசு (23) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சா வைத்திருந்ததாக 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1½ கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News