டூவீலரில் சென்ற இளைஞன் கீழே விழுந்து விபத்து- லாரி மோதி உயிரிழப்பு

Update: 2023-12-20 01:25 GMT

விபத்தில் இளைஞர் பலி

விழுப்புரம் மாவட்டம், கேதர், துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகப்பன் மகன் ஹரிஷ் குமார் (வயது 23 ) இவருக்கு சொந்தமான டூவீலரில் கரூர்- திருச்சி சாலையில், டிசம்பர் 17ஆம் தேதி மதியம் 3 மணி அளவில், சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் திருக்காம்புலியூர் சஞ்சீவி தோட்டம் அருகே வந்தபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து, விபத்து ஏற்பட்டது. அப்போது, எதிர் திசையில் வேகமாக வந்த லாரி, ஹரிஷ் குமார் மீது மோதியதால், சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த ஹரீஷ் குமாரின் தாயார் மஞ்சுளா, (வயது 47 ) என்பவர், மாயனூர் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ஹரிஷ் குமாரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக, லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மாயனூர் காவல்துறையினர்.
Tags:    

Similar News