டூவீலர் அரசு பேருந்து மீது மோதி வாலிபர் உயிரிழப்பு
தவறான திசையில் டூவீலரை செலுத்தி, அரசு பேருந்து மீது மோதி வாலிபர் உயிரிழப்பு. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Update: 2024-03-30 10:15 GMT
தவறான திசையில் டூவீலரை செலுத்தி, அரசு பேருந்து மீது மோதி வாலிபர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, மேட்டு திருக்காம்புலியூர், பள்ளிக்கூட தெருவில் வசித்து வந்தவர் சந்தானம் வயது 41. இவர் மார்ச் 29ஆம் தேதி காலை 9 மணி அளவில், கரூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் தவறாக எதிர் திசையில் தனது பதிவெண் இல்லாத டூவீலரில் வேகமாக சென்று, எதிரில் வந்த அரசு பேருந்து மீது மோதி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த சந்தானம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த சந்தானத்தின் மனைவி சத்யா வயது 35 என்பவர் இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த சந்தானத்தின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மாயனூர் காவல்துறையினர்.