பாபநாசம் அருகே மின்கம்பத்தில் டூவீலர் மோதியதில் வாலிபர் பலி

பாபநாசம் அருகே மின்கம்பத்தில் எதிர்பாராவிதமாக டூவீலர் மோதியதில் சம்பவ இடத்திலேயே வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2024-05-09 04:07 GMT

 பாபநாசம் அருகே மின்கம்பத்தில் எதிர்பாராவிதமாக டூவீலர் மோதியதில் சம்பவ இடத்திலேயே வாலிபர் உயிரிழந்தார். 

பாபநாசம் அருகே மின்கம்பத்தில் மோதி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பலி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கொரநாட்டு கருப்பூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் அருண் வயது 19 விவசாய கூலி தொழிலாளி இவர் பாபநாசம் அருகே வளத்தாமங்கலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார் பின்னர் அங்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தபோது வளத்தாமங்களம் மெயின் ரோட்டின் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதி பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே அருண் இறந்துவிட்டார்.

இது குறித்து அவருடைய தந்தையார் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .

Tags:    

Similar News