மேட்டூரில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மல்யுத்த போட்டி

மேட்டூரில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கு மாநில அளவிலான மல்யுத்த போட்டி நடந்தது.

Update: 2024-02-12 04:16 GMT

  மேட்டூரில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கு மாநில அளவிலான மல்யுத்த போட்டி நடந்தது.  

சேலம் மாவட்டம் ,மேட்டூர் அருகே காவேரி கிராசில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் 17-வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான மல்யுத்த போட்டி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் சேலம் ,ஈரோடு, தருமபுரி,நாமக்கல், கரூர், திருநெல்வேலி உள்ளிட்ட 20-கும் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 260 பேர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். எடை அளவை கொண்டு ஆண்களுக்கு 20 பிரிவுகள், பெண்களுக்கு 10 பிரிவுகள் என மொத்தம் 30 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.

நேற்று மாலை நடைபெற்ற இறுதிப்போட்டியை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன் துவக்கி வைத்து வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்க பொது செயலாளர் லோகநாதன், அதிமுக நிர்வாகிகள் பன்னீர்செல்வம், சின்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News