நெல்லையில் அடையாளம் தெரியாத பெண் உடல் மீட்பு
திருநெல்வேலியில் கிணற்றில் மிதந்த பெண் சடலத்தை காவல்துறை மீட்டனர்.;
Update: 2024-01-11 15:31 GMT
அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு
நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து எஸ்டிசி கல்லூரி செல்லும் சாலை அருகே கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக நேற்று மாலை தகவல் வெளியானது. இதன்படி பாளையங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கிணற்றில் கிடந்த அடையாளம் தெரியாத பெண் உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.