அடையாள தெரியாத ஆண் சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் அருகில் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-08 08:44 GMT
ஆண் சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் உள்ள மதுரை காளியம்மன் கோயில் அருகே அடையாளம் தெரியாத ஆண் சண்டலம் கிடப்பதாக தொட்டியம் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணவேணிக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவர் குறித்து விசாரணை செய்தார். ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தொட்டியம் காவல் நிலையத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணவேணி தகவல் அளித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த தொட்டியம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இறந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News