ஊழல் பற்றி பேச எந்த அருகதையும் திமுகவிற்கு கிடையாது.எல்.முருகன்!

கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

Update: 2024-03-18 08:54 GMT

எல்.முருகன்

கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர், “கோவையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பிரமாண்டமான ரோடு ஷோ பொதுமக்கள் ஆதரவு உடன் நடைபெற உள்ளது எனவும் பிரதமர் மோடி கடந்த ஒரு வார காலமாக தென் இந்தியாவை மையமாக வைத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் நாளை சேலத்தில் நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளதாகவும் தென்னிந்தியாவில் முழுமையாக பிரதமர் மோடி தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் என்றார். இது பாஜகவினர் மேலும் மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும் வகையிலும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் உள்ளது எனவும் கடந்த பத்து ஆண்டுகளாக பிரதமர் மோடி சிறந்த நல்லாட்சியை தந்துள்ளார் என தெரிவித்த அவர் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதே அவரது எண்ணம் எனவும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க திட்டமிட்டு பணியாற்றி வருவதாகவும் இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என பிரதமர் உழைத்துக் கொண்டுள்ளார் என்றார். தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாஜகவிற்கு ஆதரவு அளித்து வருகிறார்கள் என கூறியவர் தேசத்திற்கு எதிரானவர் யார் நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்வது யார் என்பதும் மக்களுக்கு தெரியும் எனபும் கொள்ளையடிப்பதும், ஊழல் செய்வதும் தான் இண்டி கூட்டணி நோக்கம் என்றார். நாட்டின் வளர்ச்சி தான் பாஜக இலக்கு என்றவர் 2 ஜி ஊழல் வழக்கில் மிக விரைவில் தீர்ப்பு வரும் எனவும் பாஜக யாரையும் மிரட்டி தேர்தல் பத்திர நிதி வாங்கவில்லை என்றவர் திமுக,காங்கிரஸ் அப்படி தான் தேர்தல் பத்திர நிதி வாங்கினார்களா? என கேள்வி எழுப்பினார். மாநிலத்தில் அதிக நிதி தேர்தல் பத்திரம் மூலம் வாங்கியது திமுக தான் எனவும் என்ன ஊழல் பற்றி பேச எந்த அருகதையும் திமுகவிற்கு கிடையாது எனவும் பிரதமர் மோடி ஊழலற்ற நிர்வாகத்தை தந்து வருவதாகவும் பாஜக அமைச்சர்கள் மீதோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதோ சிறிய புகார்கள் கூட இல்லை என்றார்.தேர்தல் பத்திர நிதி விபரங்களை கட்சி தலைமை வெளியிடும் எனவும் அப்போது தெரிவித்தார். பொன்முடியை உச்சநீதிமன்றம் குற்றமற்றவர் என சொல்லவில்லை எனவும் அதனால் தான் ஆளுநர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவில்லை” எனத் தெரிவித்தவர் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு “நான் ஒரு சாதாரண தொண்டன் கட்சி கட்டளை என்னவாக இருக்குமோ அதை நிறைவேற்றுவது தான் சாதாரண தொண்டனின் கடமை,பணி.கட்சி சொன்னால் போட்டியிடுவேன் என்றும் நீலகிரி தொகுதி மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் நிதி ஒதுக்கி மக்கள் பணிகளை செய்து வருகிறேன்” எனப் பதிலளித்தார்.தொடர்ந்து பேசிய அவர் “ராகுல்காந்தி, ஸ்டாலின் தோல்வியின் விழும்பில் இருக்கிறார்கள் எனவும் நாடாளுமன்ற தேர்தலில் 400 க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சியமைப்பார் எனவும் கூட்டணி இன்னும் இரண்டு மூன்று நாட்கள் உறுதியாகும் என்றார். கோவை பாஜக கோட்டையாக உள்ளதாகபும் இத்தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியிடுவது உறுதி” எனத் தெரிவித்தார்.
Tags:    

Similar News

Test