திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் அரசு பஸ் மோதி வடமாநில வாலிபர் பலி

திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் அரசு பஸ் மோதி வடமாநில வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Update: 2024-05-30 10:49 GMT

காவல் நிலையம்

திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் அரசு பஸ் மோதி வடமாநில வாலிபர் பலி! மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் (வயது 20.) இவர் திருப்பூரில் தங்கி பணியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு சூரஜ் திருப்பூர் பி.என் ரோடு கணக்கம்பாளையம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது திருப்பூரில் இருந்து குன்னத்தூருக்கு சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக சூரஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூரத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சில நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

Tags:    

Similar News