உத்திரமேரூர் முருக பக்தர்கள் திருத்தணிக்கு பாதயாத்திரை

தைப்பூசத்தை முன்னிட்டு உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த முருக பக்தர்கள் காவடி எடுத்தது கொண்டு பாதயாத்திரையாக திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்றனர்.

Update: 2024-01-26 03:57 GMT

பாத யாத்திரை 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கீழ்வெங்கடாச்சாரி தெரு, குபேர பாலமுருகன் கோவில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் கிருத்திகை அன்னதான சபாவை சேர்ந்தவர்கள், ஆண்டுதோறும், தைப்பூசத்தையொட்டி, உத்திரமேரூரில் இருந்து, திருத்தணிக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர். அதன்படி, நடப்பாண்டு, 28ம் ஆண்டு பாதயாத்திரையையொட்டி, நேற்று, அதிகாலை, 4:30 மணிக்கு காவடி கட்டுதல், பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதபூஜை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, காலை 7:30 மணிக்கு பாலசுப்ரமணிய கோவிலில் இருந்து முருக பக்தர்கள், பாதயாத்திரையாக திருத்தணிக்கு புறப்பட்டனர்."
Tags:    

Similar News