வந்தவாசியில் வாச்சாத்தி வழக்கு வெற்றி விழா

வந்தவாசி நகரில் வாச்சாத்தி வழக்கு வெற்றி விழா,பேரவை மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-21 10:02 GMT

பேரணியில் பங்கேற்றவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் -வந்தவாசி நகரில் வாச்சாத்தி வழக்கு வெற்றி விழா தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சார்பில் ஆயிரக்கணக்கான இருளர் & காட்டுநாயக்கன் பழங்குடி மக்களின் எழுச்சிமிகு பேரணி & பொதுக்கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வந்தவாசி வட்ட செயலாளர் அப்துல்காதர் வரவேற்றார்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரும்,தமிழ்நாடு பழங்குடி நலவாரிய ஆன்றோர் மன்ற உறுப்பினரும் இரா.சரவணன் அவர்கள் தலைமையேற்றார். டாக்டர். அம்பேத்கர் விருதுபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பெ.சண்முகம் அவர்கள் வாச்சாத்தி வழக்கு வெற்றி விளக்கவுரை யாற்றினார்.இந்நிகழ்வில் காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் சங்க பொதுச்செயலாளர் அய்யனார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சிவக்குமார்,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணை பொதுச்செயலாளர் செல்வம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ,தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News