மருதுபாண்டியர், தேவர் குருபூஜையை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு

Update: 2023-11-21 03:44 GMT

சீறிப்பாய்ந்த காளையை தாவிப்பிடித்த வீரர்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தொண்டிசாலை போக்குவரத்து பணிமனை அருகே உள்ள திடலில் மருதுபாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 25க்கு மேற்பட்ட காளைகளும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஒரு காளை மாட்டிற்கு 20 நிமிட அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் 9 வீரர்கள் களம்கண்டனர். இதில் வெற்றிபெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுபொருட்களும், பணப்பரிசும் வழங்கப்பட்டதுடன் சுழல் கோப்பைகளும் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News