வைகுண்ட ஏகாதசி; லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்

பள்ளிபாளையம், ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கு வழங்க லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

Update: 2023-12-20 16:21 GMT

பள்ளிபாளையம், ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கு வழங்க லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ராஜவீதி காவிரி கரையோரம் ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.. இந்த கோவிலில் வருகிற சனிக்கிழமை அன்று 28 ஆம் ஆண்டாக வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிகழ்வு நடைபெற உள்ளது. முதல் நிகழ்வாக சனிக்கிழமை அன்று காலை 4:00 மணிக்கு சுப்ரபாதத்துடன் துவங்கும் நிகழ்வானது 5.40 மணிக்கு பரமபத வாசல் திறப்பு விழா மற்றும் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி விசேஷ பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 20,000 லட்டுக்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .

ஆதி கேசவ பெருமாள் கோவில் அருகே உள்ள கோவில் மண்டபத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பெருமாள் கோவில் பக்தர்கள் லட்டுகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.வைகுண்ட ஏகாதசி தினத்தன்று காலை தொடங்கி மாலை வரை கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்க உள்ளதாகவும், நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் ஆதிகேசவ கோவில் விழா கமிட்டியார் தெரிவித்துள்ளனர்..

Tags:    

Similar News