போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

Update: 2024-02-28 12:40 GMT

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.


விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் குறித்து அவதூறு சுவரொட்டி ஒட்டியதாக கூறப் படுகிறது. இதை கண்டித்தும், சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் வீர.பொன்னிவளவன், ஒன்றிய செயலாளர் கலைமாறன் தலைமையில் ஆரோவில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து அவர்களிடம் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News