விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-05 17:14 GMT

வெற்றி கொண்டாட்டம் 

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதியில் சித்தாமூர் அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் முகாம் சார்பாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை எழுச்சித்தமிழர் முனைவர். ரவிக்குமார் அவர்களின் மாபெரும் வெற்றியை, புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் சார்பாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாகவும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த மாபெரும் நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மு.சுரேஷ் ஓவியர் ராஜா,அபி,மாசி.தமிழரசன், சமத்துவன் ஏ.சுகுமார், ஓவியர் ஜெகன் மற்றும் மகளீர் அணிகள் முகாம் சிறுத்தைகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News