விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் மக்களவை தேர்தலில் வாக்கு சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-05 02:55 GMT
ஆர்ப்பாட்டம்
தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வரக்கூடிய தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தாமஸ், தென்காசி கிழக்கு மாவட்ட செயலாளர் வசந்தகுமார், வடக்கு மாவட்ட செயலாளர் லிங்க வளவன். மண்டல துணைச் செயலாளர் சித்திக். குழந்தை வள்ளுவன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News