திருவண்ணாமலையில் வீரமங்கை வேலுநாச்சியார் பேச்சுப் போட்டி

திருவண்ணாமலையில் வீரமங்கை வேலுநாச்சியார் பேச்சுப் போட்டி நடைபெற்றது.

Update: 2024-01-18 08:45 GMT

மாணவர்களுக்கு பரிசு வழங்கல் 

திருவண்ணாமலை மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் 6வது தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் திட்டத்தின் கீழ், மாணவ மாணவிகளுக்கு வேலுநாச்சியார் வீரமங்கை பற்றிய பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.

இதில் 8,9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கு பெற்று மிகவும் சிறப்பாக உரை நிகழ்த்தினார். அவர்களுள் ஆண்கள் பிரிவில் முதல் மூன்று இடம் பெற்றவர்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடம் பெற்றவர்கள் என வெற்றி பெற்றவர்களுக்கு திருவண்ணாமலை விளையாட்டு ஸ்டேடியத்தில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ் அவர்களின் பொற்கரங்களால் சான்றிதழ்களும் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ வ கம்பன். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News